கடவூர், ஜூன் 25: கடவூர் அடுத்த சோனம்பட்டியில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மண்டல இணை இயக்குனர் மணிமாறன் உத்தரவின் பேரில் நடந்த இந்த மருத்துவ முகாமில் உதவி இயக்குநர் முரளிதரன் தலைமை வகித்தார். டாக்டர்கள் மணிவண்ணன், சுதா, சுரேஷ்குமார் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கி சிகிச்சை அளித்தனர். மேலும் ஆடு, மாடுகளுக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.