×

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே பராமரிப்பு இல்லாததால் செடி கொடிகள் முளைத்த காய்கறி மார்க்கெட் கட்டிடம்

கரூர், ஜூன் 25: கரூர் மார்க்கெட் கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மினிபேருந்து நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. கரூர் நகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த மார்க்கெட் கட்டிடத்தினை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் கட்டிட சுவற்றில் செடி முளைத்து வருகிறது. காரைகளும் பெயர்ந்து வருகிறது. கட்டிடத்தை பழுதுபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் உள்ளனர். வாடகை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vegetable market building ,bus station ,Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்