×

இலவச வீட்டுமனைக்காக கலெக்டர் வழங்கிய பட்டா போலியா?

விருதுநகர், ஜூன் 25: அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, கடந்த 2012ல் மனு அளித்தோம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்லூரணி கிராமத்தில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு தலா 2 சென்ட் இலவச வீட்டுமனையாக அப்போதைய கலெக்டரால் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தில் வீடு கட்டுவதற்காக விஏஓவிடம் சென்று கேட்டோம். அரசாங்கம் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை பார்த்து விஏஓ செல்லாது; போலியானது என கூறிவிட்டார். கலெக்டர் வழங்கிய பட்டா போலியானது என்றால் எப்படி? மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் போலியானதா என ஆய்வு செய்து உரிய பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...