×

அல்லம்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

விருதுநகர், ஜூன் 25: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், அல்லம்பட்டி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகரை ஒட்டி உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் பழைய குல்லூர் சந்தை ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு, அல்லம்பட்டி ரோடு, எம்ஜிஆர் நகர் ரோடு, ஸ்ரீராம் தியேட்டர் ரோடு முதல் அனுமன் நகர் வரையிலான சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.

பல ஆக்கிரமிப்புகளின் உட்பகுதியில்தான் தெரு வாறுகால், குடிநீர் குழாய்கள் செல்கின்றன. இதனால், வாறுகால் அடைப்பு, குடிநீர் குழாய்களை சரி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பழைய குல்லூர்சந்தை சாலையின் நடுவே உள்ள மரங்கள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளன. மரங்களை வைத்து ஆக்கிரமித்துள்ளதால், அவைகளை அப்புறப்படுத்தி, சாலையில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வாகனங்கள் இடையூறின்றி செல்ல வழி கிடைக்கும்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : Allampatti ,
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...