×

திருப்புத்தூரில் இடியுடன் மழை

திருப்புத்தூர், ஜூன் 25: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நேற்று மாலை திடீரென பலத்த இடி, காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கி 29ம் தேதி நிறைவடைந்தது. இருந்தாலும் தற்போது வரை கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கமும் குறையவில்லை, மழையும் பெய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சாலைகளிலும் கானல் நீர் ஓடியது. மேலும் டூவீலர்களில் செல்லும் போது அனல் காற்று வீசியது. இந்நிலையில் திருப்புத்தூரில் நேற்று மதியம் வரை கடுமையாக தாக்கிய வெயில் மாலை 4 மணியளிவில் சற்று குறைந்தது.

பின்னர் திடீரென மேக மூட்டத்துடன் மாறிய வானம் மாலை சுமார் 5 மணியளவில் திடீரென இடியுடன் மழை பெய்யத்துவங்கியது. மேலும் பலத்த காற்றுடன் இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழைகொட்டியது. இதனால் மழை பெய்ய ஆரம்பித்தவுடனே மின்தடை ஏற்பட்டு மழை விட்டும் வெகுநேரம் வரை மின்விநியோகம் வரவில்லை. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டில் சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் சென்றன. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து குழுமையான காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED வடமாடு மஞ்சு விரட்டு: மாடு முட்டி 3 பேர் காயம்