×

சிறந்த பயிற்சியாளர் விருது

மதுரை, ஜூன் 25: தமிழகத்தில் மத்திய அரசின் நேருயுவகேந்திராவின் சிறந்த பயிற்சியாளர் விருது மதுரையை சேர்ந்த பயிற்சியாளருக்கு கிடைத்தது.
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் நேரு யுவகேந்திரா அமைப்பு செயல்படுகிறது. இந்த மையத்தின் மூலம் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு, பெண்கள் நலம், கிராம வளர்ச்சி, தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துதல், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவிகள், பெண்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்களை நேருயுவகேந்திரா நியமித்துள்ளது.

இதில் மத்திய, மாநில அரசின் திட்டங்களை சிறந்த முறையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கு புரியும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக மதுரை ஆனையூரை சேர்ந்த பயிற்சியாளர் பாண்டியராஜா சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது பாராட்டு சான்றிதழை நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் சடாச்சரவேல் நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் பாண்டியராஜாவுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் கூடுதல் எஸ்.பி பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...