×

அனுமதி பெறாத பள்ளிகளை மூட வேண்டும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருவள்ளூர்,ஜூன் 25: அனுமதிப்பெறாத  பள்ளிகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது. திருவள்ளூர் லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் கே.பாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் ரவி, துணைச் செயலர் ரமேஷ், மகளிரணி நிர்வாகிகள் புஷ்பலதா, மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலர் இரா.தாஸ் சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் காரணமாக எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்,  மாறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்களையும் கலந்தாய்வு நடைபெறும் முன்பு ரத்து செய்து, பதவி உயர்வு பாதிப்பில்லாமல் வழங்க வேண்டும், மாறுதல் கலந்தாய்வு அரசாணை 218-இன் படி 1.6.2019-இல் 3 ஆண்டுகள் முடிந்திருத்தல் என்ற விதியை தளர்த்தி, ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும், மேலும், இந்த மாவட்டத்தில் அனுமதி பெறாத பள்ளிகளை உடனே மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Closure ,schools ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...