×

நடைபாதையை ஆக்கிரமிக்கும் குடிமகன்கள்

திருப்பூர்,ஜூன்25: திருப்பூர் மாநகரில் நடைபாதையை குடிமகன்கள் ஆக்கிரமித்து படுத்துக்கொள்வதால், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகரில், குறுகலான ரோடுகள் உள்ளன. இதனால், அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய ரோடுகளில் தடுப்புக்கம்பி அமைத்து பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்கப்பட்டது. சமீபகாலமாக, இந்த நடைபாதையில் குடிமகன்களும், பிச்சைக்காரர்களும் ஆக்கிமித்துள்ளனர். மேலும் சில இடங்களில் சாலையோர வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், ரோட்டில் நடந்து செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படுகிறது. எனவே குறுகலான ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...