பெரும்புதூர், ஜூன் 25: குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், படப்பை பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடந்தது. குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமை வகித்தார். படப்பை ஊராட்சி பொறுப்பாளர் ஏழுமலை வரவேற்றார். ஒன்றிய பொறுப்பாளர்கள் மகாதேவன், ஏழுமலை, அரிகிருஷ்ணன், செல்வி பார்த்தசாரதி, தாவீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், கான்ஸ்டைன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு,
1000 பேருக்கு வேட்டி, சேலை, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், 25 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 600 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பேச்சாளர்கள் சுகுமார், ராஜேந்திரன், சீனிவாசன், ஒன்றிய அமைப்பாளர்கள் வந்தேமாதரம், ஜமீர், அறிவொளி, மலர்விழி தமிழ்அமுதன், சிலம்புச்செல்வன், வீரபாண்டியன், ஊராட்சி செயலாளர்கள் பார்த்தசாரதி, முருகன், சுமன், அரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.