×

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

வேளச்சேரி, ஜூன் 25: சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர், திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (65). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கிணற்றில் தண்ணீர் பிடிக்கும்போது தவறுதலாக வாளி விழுந்துவிட்டது. இதனை எடுக்கும்படி மகேந்திரனிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து மகேந்திரன், அந்த கிணற்றை எட்டிப் பார்த்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர், கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார். உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...