×

தூத்துக்குடியில் ஜூன் 28ல் முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி, ஜூன் 25: தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் நடத்திட தொழில்முனைவோர் கருத்தரங்கு கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிப்பிக்கூடத்தில் நடைபெற உள்ளது.  பல்வேறு மாவட்ட அலுவலர்கள் துறை சார்ந்த வேலைவாய்ப்பு குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை  கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Tags : Soldiers ,Offenders ,Thoothukudi ,
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை