×

கிராம சபையில் பங்கேற்போருக்கு தீர்மான நகல் மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், ஜூன் 25:  கிராம சபை கூட்டங்களில் பங்கேற்போருக்கு அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான நகல் வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வலியுறுத்தினர்.
குமரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சசி, கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட எபிநேசர், தொகுதி பொறுப்பாளர் நாராயணன், சங்கர் கண்ணன், முத்து சிவா, ராபின்சன், மணிகண்டன், ஆல்பின், விக்ரம்குமார், முருகன், சுப்பிரமணி, சுப்பு, வடிவேலு ஆகியோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனு:  வரும் 28ம்தேதி குமரி மாவட்டத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை உரிய முறையில் விளம்பரப்படுத்தி மக்களை வரவழைக்க வேண்டும். எவ்வித முறைகேடும் இல்லாமல் சட்டபடி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்தின் நகல்கள் மக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...