×

கடலில் முழ்கி பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு நலஉதவி கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், ஜூன் 25: கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.  மண்டைக்காடுபுதூர் லூசியா சர்ச் கவுன்சில் சார்பில் அதன்  நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,  கல்லுக்கூட்டம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் கடந்த 16ம்தேதி காலை மிக்ேகல் நாயகம் மகன் சச்சின், ஸ்டாண்டர் மகன் இன்பென்ட் ரஹீத், சகாய ராஜன் மகன் சகாய ரெகின் ஆகியோர் கடற்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத அலை இழுத்து சென்றதில் அவர்கள் இறந்து போயினர். எனவே மேற்கண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு நல உதவிகள் செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்