×

ஆத்தூர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்

ஆத்தூர், ஜூன் 21: ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின் பேரில், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்  நேற்று நடைபெற்றது. முகாமை நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி துவக்கி வைத்தார்.  இதையடுத்து, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், மாரிமுத்து ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை துப்புரவு பணியாளர்கள் சுத்தப்படுத்தினர். மேலும், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.  இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் பிரபாகரன், செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து துப்புரவு பிரிவு ஊழியர்களும், மேற்பார்வை ஊழியர்களும் பங்கேற்றனர்.

Tags : sanitation camp ,municipality ,Attur ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்