திருச்செங்கோடு, ஜூன் 21: மல்லசமுத்திரம் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) மாதேஸ்வரி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் கௌரி, கோபாலகிருஷ்ணமூர்த்தி ஆகியோர், உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுனர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு பயிற்றுனர் செல்வகுமார் நன்றி கூறினார்.