×

சிவகாசியில் 10 பவுன் நகை திருட்டு

சிவகாசி, ஜூன் 21:சிவகாசி காந்திரோடு மணிநகரில் வசித்து வருபவர் அச்சக தொழிலாளி செந்தியப்பன். இவரம் இவரது மனைவியும் பெங்களுரில் வசிக்கும் மகனை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு சென்றனர். நேற்றுகாலை அருகிலுள்ள உறவினர் செந்தியப்பன் வீட்டை பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 6 பவுன் செயின், தங்க கடிகாரம் உட்பட 10 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்க்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகை எடுக்கப்பட்டன. நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு