×

மனிதசங்கிலி போராட்டம் துண்டுபிரசுரம் வினியோகம்

தொண்டி, ஜூன் 21: தமிழக மக்களுக்கு எதிரான பேரழிப்பு திட்டங்களை கைவிடக்கோரி வரும் 23ம் தேதி 600 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டும் தொண்டி பகுதியில் அதிகமானோரை பங்கேற்ற செய்யவும் பொது மக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கினர். ஹைட்ரோ கார்பன் திட்டம், அணுமின் நிலையங்கள், எட்டுவழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் துவங்க உள்ளனர். இது போன்ற திட்டங்களை கை விட கோரியும் காவேரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் வரும் 23ம் தேதி பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 600 கி.மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு ஆதரவு கோரி நேற்று தொண்டி பேரூராட்சி பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கினர். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், பேரிழப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், மாஸ்டர் அனந்தன், ஆரியசாமி, செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை