×

கலெக்டரை நியமிக்காமல் மக்கள் பணி கடும் பாதிப்பு

மதுரை, ஜூன் 21: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மதுரை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக மாறுதல் செய்யப்பட்ட கலெக்டருக்கு பதில் புது கலெக்டர் நியமிக்காமல் 19 நாட்களாக காலியாக உள்ளது. அதேபோல் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஏப்ரலில் ஓய்வு பெற்றும் இதுவரை புது அதிகாரி நியமிக்கப்படவில்லை. கலெக்டர், டி.ஆர்.ஓ. ஆகிய இரு பொறுப்புகளிலும் இன்னொரு துறை அதிகாரி கவனிப்பது சாத்தியமாகாது. ஏன்? இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மர்மமாக உள்ளது. கலெக்டர் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. தலைவிரித்தாடும் குடிநீர் திண்டாட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் நேரடி ஆய்வு நடத்தி முடிவு எடுக்க முடியாமல், மக்கள் பணி கடும் பாதிப்படைந்துள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் மக்கள் நலன் கருதி உடன் கலெக்டரை நியமிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...