×

கோவில்பட்டி கோயில்களில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்

கோவில்பட்டி, ஜூன் 21: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இங்குள்ள 16 உண்டியல்கள் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த தெப்பக்குளம் விநாயகர் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், மார்க்கெட் ரோடு முருகன் கோயில் என 3 கோயில்களிலும் தலா 1 என மொத்தம் 19 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. சங்கரன்கோவில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செல்லத்துரை, கோயில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜா, ஆய்வாளர் பகவதி, தக்கார் பிரதிநிதி செந்தில்குமார், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் ஆகியோரது மேற்பார்வையில் இப்பணி நடந்தது. மதுரை ஐயப்பா சேவா சபை குழுவினர் மற்றும் கோவில்பட்டி திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் காணிக்கைகளை எண்ணினர். 19 உண்டியல்களில் பக்தர்கள் ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 651ம், 72 கிராம் தங்கமும், 210 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Tags : temples ,Kovilpatti ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...