×

தேன்கனிக்கோட்டை அருகே 9 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டெடுப்பு

தேன்கனிக்கோட்டை, ஜூன் 21: தேன்கனிக்கோட்டை அருகே, 9 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கண்டெடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்லிகார்ஜூனா துர்கம் மலைப்பகுதி ஏணிபண்டா ஏரி அருகே, 3 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன. அதை எடுத்துசென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மாலையில் மீண்டும் அதே பகுதியில் ரோந்து சென்ற போது, மேலும் 6 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன. இதையும் எடுத்துக்கொண்ட போலீசார், அருகில் உள்ள கிராமங்களில் விசாரணை நடத்தினர்.

இதில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், துப்பாக்கிகளை ஒப்படைக்காத சிலர், வனப்பகுதியில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதன்படி  தான், நேற்று காலை முதல் மாலை ரோந்து சென்ற போது மொத்தம் 9 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட எஸ்பியிடம் வழங்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Patriots ,Thenkanikottai ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது