×

தபால்துறை குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 21:  கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வருகிற 26ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அஞ்சல் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை அனுப்பலாம். அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
 
பதிவு தபால், எம்.ஓ., வி.பி.இன்சூர்டு லெட்டர் மற்றும் விரைவு தபால் ஆகியவற்றுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளரின் பெயர், விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Post Office ,Grievance Meeting ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு