×

உப்பு தண்ணீருக்காக காத்திருக்கும் அவலம் கரூர் அருகே நரிக்கட்டியூரில் குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் மெத்தனம்

கரூர், ஜூன் 21: குடிநீர் வீணாவதை தடுக்காத உள்ளாட்சி நிர்வாகத்திற்குபொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கரூர் அருகே உள்ளது நரிக்கட்டியூர். இங்குமேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைதொட்டி மூலமாக குடிநீர் வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொட்டி நிரம்பியதும் மோட்டாரை நிறுத்துவதில்லை. இதனால் தொட்டி நிரம்பி குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது.

நேற்றும் இதேபோல தண்ணீர் தொட்டி நிரம்பி சாலையில் வழிந்து தேங்கியது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும்தானா? நிர்வாகத்திற்கு கிடையாதா. தினமும் வீணாகும் குடிநீரை வைத்து இன்னொறு முறை குடிநீர் விநியோகம் செய்யலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில் குடிநீரை உள்ளாட்சி நிர்வாக கோளாறு காரணமாக வீணாக்கி வருவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். போர்க்கால நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாகாமல் தடுக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...