×

விவசாயிகள் உதவித்தொகை பெற ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்

கரூர், ஜூன் 21: விவசாயிகள் உதவித்தொகை ஜமாபந்தியில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2எக்டர் வரை நிலம் வைத்திருந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி 4மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு குறு நடுத்தரம், பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்த்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளிதது பயன்பெறலாம்., மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்துகொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்த்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வரும்30ம்தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து அதன் அடிப்படையில் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்த்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கென தற்போது நடைபெற்றுவரும் ஜமாபந்தியை பயன்படுத்திக்கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்