கரூர்,ஜூன் 21: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி 2ம்நாளில் கலெக்டர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் 15பேருக்கு ரேஷன்கார்டு, 3 பேருக்கு மழைத்தூவான் கருவி, 2பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கினார்.
வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, நிலஅளவை உதவி இயக்குனர் பழனிக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நோய்களுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட ஆசனங் களை முறையாக செய்வதால் நன்மை பயக்கும். எல்லா யோகாசன பயிற்சிகளையும் செய்யத் தேவையில்லை. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதற்கு தகுந்தவாறு எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தனுராசன பயிற்சிகளையும், தைராய்டு குறைபாடு உள்ள வர்கள் மட்சியாசன பயிற்சியையும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சூரிய நமஸ்கார பயிற்சியையும், மேற்கொண்டால் நலம் தரும்.