×

தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்த புள்ளிமான் சாவு


சீர்காழி, ஜூன் 21: சீர்காழி அருகே வடகால் கோடங்குடி கிராமத்தில் வசிப்பவர் கலியமூர்த்தி இவருக்கு சொந்தமான பருத்தி வயலில் பாதுகாப்பிற்காக வலை அமைத்திருந்தார். இந்த வலையில் நேற்று ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் சிக்கி இறந்த நிலையில் காணப்பட்டது. இதனை அறிந்த விஏஓ வெங்கடேசன் சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து வனசரக அலுவலர் கருப்பு உத்தரவின்பேரில் வனக் காப்பாளர்கள் சசிகுமார், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி சீர்காழி வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடங்குடி பகுதியில் மான்கள் இல்லாத நிலையில் அந்தப் பகுதிக்கு மான் எப்படி வந்தது? தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்தபோது வலையில் சிக்கிக் இருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

Tags : Saimana ,village ,search ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...