×

கீழ்வேளூர் அருகே தீராத வயிற்று வலியால் விவசாய கூலி தற்கொலை

கீழ்வேளூர், ஜூன் 21: கீழ்வேளூர் அருகே தீராத வயிற்று வலியால் விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கோகூரை சேர்ந்தவர் தம்பையா (60). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்தது. வயிற்று வலி அதிகமானதால் அவதிபட்ட தம்பையா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Keezhveloor ,
× RELATED அமைச்சர் தகவல் கீழ்வேளூர் ஒன்றியத்தில்