×

அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஜூன் 21: திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் ஒருநாள் அறிவியல் கண்காட்சி வருகிற 27ம் தேதி நடக்–்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
கண்காட்சியில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடக்கிறது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் உண்டு. அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்று தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தலாம். ஒரு அறிவியல் படைப்பு குழுவில் அதிகபட்சமாக 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அறிவியல் சார்ந்த அனைத்து படைப்புகளுக்கும் அனுமதி உண்டு. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Science Fair ,
× RELATED அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி