×

அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது

அறந்தாங்கி, ஜூன் 21: அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கியில் நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, நகர கூட்டுறவு வங்கித் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஆதிமோகனகுமாரும், துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த செந்தில்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி வகித்தனர்.

இந்த நிலையில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி, காங்கிரஸ் பிரமுகர் தன்ராஜ் என்பவர் தொடுத்த வழக்கில், தன்ராஜ்க்கு ஆதரவாக கோர்ட்டு,அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கிக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 பொது, 3 மகளிர், 2 ஆதிதிராவிடர் உள்பட 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிட 55 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கிக்கு 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வங்கியின் 10 ஆயிரத்து 92 ஏ வகுப்பு உறுப்பினர்கள் தகுதி பெற்றுள்ளனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) அறந்தாங்கி தாலீப் திருமண மஹாலில் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Voting ,Aranthangi Co-operative City Bank ,
× RELATED 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு