×

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

கோவை, ஜூன் 21: கோவை சிங்காநல்லூர் இந்திரா நகர்அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன் தினம் இரவு ரயிலில் அடிபட்டுவாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 25வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் பச்சை கலரில் டீ சர்ட், சாம்பல்நிறத்தில் டிராக் சூட் அணிந்திருந்தார்.அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?என தெரியவில்லை. கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : train accident ,
× RELATED ஆந்திராவில் ஏற்பட்ட கொடூரமான ரயில் விபத்து : 19 பேர் பலியான பரிதாபம்!!