×

இயக்குனர் பா.ரஞ்சித்தை இழிவாக பேசுவோர் மீது நடவடிக்கை எஸ்பியிடம் மனு

தஞ்சை, ஜூன் 21: இயக்குனர் பா.ரஞ்சித்தை இழிவாக பேசி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை எஸ்பியிடம் நீலம் பண்பாட்டு மையம் மனு அளித்தது. தஞ்சை எஸ்பி மகேஸ்வரனிடம் நீலம் பண்பாட்டு மையம் அமைப்பின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் அமரர் உமர் பாருக் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் ராஜராஜசோழன் குறித்த சில வரலாற்று செய்திகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய கருத்துக்களில் முரண்பட்ட வீரா.செல்வராசு மற்றும் சரவணதேவர் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு, இந்து மக்கள் கட்சி மற்றும் அம்பி.வெங்கடேசன் போன்றவர்கள் இயக்குனர் பா.ரஞ்சித்தை இழிவாக பேசி வலைதளங்களில் பரப்புகின்றனர்.

இவர்களது காணொளி பதிவுகள் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. எனவே மேற்கண்ட நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சமூக அமைதிக்கு வழிகாண வேண்டும். மேலும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நீலம் பண்பாட்டு மைய பொறுப்பாளர்கள் விக்ரம், முரளி, நிர்மல்குமார், அய்யப்பன் ஆகியோர் மனு அளித்திருந்தனர்.

Tags : Pal Ranjith ,SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்