×

கடலூர் மண்டலத்தில் பொது வினியோக திட்டம் நீடாமங்கலத்தில் இருந்து 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், ஜூன் 21: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன் களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லை தனியார் அரவை முகவர் மூலம் அரவை செய்த அரிசி மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி, வட்ட கிடங்குகள் மன்னார்குடி, ஆதனூர் மற்றும் கீழபாண்டியில் சேமித்து வைக்கப்பட்டடிருந்த சன்ன ரக அரிசி மூட்டைகள் 100 லாரிகளில் 1250 டன் சன்ன ரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) கடலூர் மண்டலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Needamangalam ,
× RELATED நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில்...