×

மத்திய மண்டல 4 இன்ஸ்பெக்டர்கள் திருச்சிக்கு மாற்றம்

திருச்சி, ஜூன் 21: மத்திய மண்டலத்தில் பணியாற்றிய 4 இன்ஸ்பெக்டர்கள் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக 3 ஆண்டுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து தேர்தல் முடிந்து பிரதமர் பதவி ஏற்ற நிலையில் பணி மாறுதல் பெற்று சென்றவர்கள் மீண்டும் விரும்பிய இடத்தில் மாறுதலாகி வருகின்றனர்.


இதில், மத்திய மண்டலத்தில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், அரியலூர் இன்ஸ்பெக்டர் ராஜூ, திருவாரூர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி இன்ஸ்ெபக்டர் சத்யநாதன் ஆகிய 4 இன்ஸ்பெக்டர்களை திருச்சி மாநகருக்கு மாற்றி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து திருச்சி மாநகரில் காலியாக உள்ள பணியிடங்களில் 4 இன்ஸ்ெபக்டர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

Tags : Central Region 4 Inspectors Transition ,Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்