×

முகாம் சிறைவாசிகள் உண்ணாவிரதம் வாபஸ் ஏசி சமரசம்

திருச்சி, ஜூன் 21: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் போலி பாஸ்போர்ட், விசா முடிவு, கள்ளத்தோணியில் வெளிநாடு தப்ப முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி இலங்கை தமிழர், வங்கதேசம், நைஜீரியன் உள்ளிட்ட 54 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நைஜீரியன், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப கோரி கடந்த 17ம் தேதி இரவு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதையடுத்து கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை அவர்கள் விலக்கிக்கொண்டனர்.

Tags : Camp prisoners ,withdrawal ,AC ,
× RELATED பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்...