×

யோகா பயிற்சியில் மருத்துவ மாணவிகள் ரங்கம் கோயிலுக்கு வந்த பக்தரிடம் ரூ.80 ஆயிரம் நகைகள் அபேஸ்

திருச்சி, ஜூன் 21: ரங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் களவுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளுர் மாவட்டம் கங்கவள்ளிபுரம் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன்(47). இவர் கடந்த 16ம் தேதி தனது வயதான தாயை அழைத்துக்கொண்டு ரங்கத்திற்கு சாமி தரிசனத்திற்கு வந்தார். வடக்கு ஆண்டாள் வீதியில் காரை நிறுத்திவிட்டு, முதியோர் தள்ளுவண்டியில் தாயை வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வந்தார்.

இதில் கைப்பையை தள்ளுவண்டியின் கைப்பிடியில் மாட்டி இருந்தார். அந்த பையில் இரண்டரை பவுன் பிரேஸ்லெட், 30 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். இந்நிலையில் காரில் ஏறும்போது, தள்ளுவண்டியில் மாட்டி இருந்த கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் காணாததால் ரங்கம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Devotees ,Aurangham Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...