×

குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசின் அலட்சியத்தை கண்டித்து திருச்சியில் நாளை திமுக ஆர்ப்பாட்டம் கே.என்.நேரு அறிக்கை

திருச்சி, ஜூன் 21: குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசின் அலட்சியத்தை கண்டித்து திருச்சியில் நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தும், குடிநீர் பிரச்னைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அதிமுக அரசின் அலட்சியத்தை கண்டித்தும், முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்விகளை கண்டித்தும், குடிநீர் பிரச்னையை சமாளிக்க உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திமுக சார்பில் நாளை (22ம் தேதி) காலை 9 மணிக்கு திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை செயலாளர்கள், முன்னாள், இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dr ,protests ,DMK ,Trichy ,
× RELATED திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன்,...