×

தொட்டியம் பெண் எஸ்ஐயை கண்டித்து முசிறி டிஎஸ்பி அலுவலகத்தை நாமக்கல் வக்கீல்கள் முற்றுகை

தா.பேட்டை, ஜூன் 21: தொட்டியம் காவல் நிலையத்தின் எஸ்ஐயை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் முசிறி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கலை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராவணன் என்பவர் வழக்கு தொடர்பாக தொட்டியம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு பணியில் இருந்த எஸ்ஐ லதா என்பவர் வழக்கறிஞரை மரியாதை குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாமக்கல் பார் சங்கத்திலிருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் முசிறி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த டிஎஸ்பியிடம் இச்சம்பவம் குறித்து கடந்த 19ம் தேதி தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே எஸ்ஐ லதா மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதுகுறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் டிஎஸ்பி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Attorneys ,office ,Muzirie DSP ,Thottiyam ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்