×

புதன்சந்தை பஸ் நிறுத்தத்திற்கு சேலம் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை

சேந்தமங்கலம், ஜூன் 19: புதன்சந்தை பஸ் நிறுத்த பகுதிக்கு, சேலம் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்சந்தை பஸ் நிறுத்தத்தில் இருந்து, சேலத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தம் வழியாக மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கலில் இருந்து அரசு மற்றும் தனியார்  பஸ்கள் 100 க்கு மேற்பட்டவை இயக்கப்படுகிறது. தற்போது புதன்சந்தை பஸ் நிறுத்தத்தில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால், இந்த பேருந்து நிறுத்தத்தின் வழியாக சேலம் செல்லும் பெரும்பாலான பஸ்கள் அனைத்தும் மேம்பாலம் வழியாக செல்கிறது.  முன்பு 10 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த பஸ்கள், தற்போது பயணிகள் குறைவாக இருந்தால் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே சேலம் செல்லும் பஸ்கள் வந்து செல்கிறது.இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் இப்பகுதியில் சேகோ பேக்டரிகள், கோழிப்பண்ணைகள், துணை மின்நிலையம் மற்றும் 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நிழற்கூடம் இல்லாததால் மழை, பனி, வெயில் காலங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேலம் செல்லும் அனைத்து பஸ்களும் பாலத்திற்கும் கீழ் புதன்சந்தை பஸ் நிறுதத்தில் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Salem ,bus stop ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை