×

வெங்கடேஸ்வரா மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான கருத்தரங்கம்

பேராவூரணி, ஜூன் 19: பேராவூரணி வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் பக்கிரிசாமி வரவேற்றார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமம் மற்றும் ஏஆர்ஜெ கல்வி குழும துணைத்தலைவர் டாக்டர்; ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார். சிங்கப்பூர் கல்வி சேவையை சேர்ந்த மூத்த கல்வி அதிகாரியான காஜா அலாவுதீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். பேராவூரணி ஏசிஇ அறக்கட்டளை தலைவர் அடைக்கலம் பங்கேற்றார். கல்லூரி துணை முதல்வர் மகரஜோதி நன்றி கூறினார். விழாவில் 400 மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Tags : Seminar ,Venkateswara Womens College ,
× RELATED தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட முதுநிலை மாணவர் கருத்தரங்கம்