×

கலெக்டர் தகவல் வெயில் குறையும் வரை வகுப்பறைகளில் இறைவணக்கம்

புதுக்கோட்டை, ஜூன்19: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் குறையும் வரை பள்ளிகளில் இறைவணக்க நேரத்தை வகுப்பறைகளிலேயே நடத்த வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டது.புதுக்கோட்டை நகர்நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜாவை நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, கோடைகாலத்தில் கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில் பள்ளிகளில் காலை நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை இறைவணக்கம் நடைபெறும்.

இந்த இறை வணக்க நேரத்தில் சிறார்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வெயில் குறையும்வரை இறைவணக்க நேரத்தை பள்ளிகளில் வகுப்பறைகளிலேயே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதனை வருகிற ஜூலை 1ம்தேதி வரை அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags : collector ,classrooms ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...