×

கரூர் நகராட்சி அப்னா நகரில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு

கரூர், ஜூன் 19: கரூர் நகராட்சிக்குட்பட்ட பொன்நகர் பிரிவு அருகே உள்ள அப்னா நகர்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட பொன்நகர் பிரிவு அருகே அப்னா நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எனவே இந்த பகுதியில் உள்ள மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனடிப்படையில் தேர்தலுக்கு முன்பு அப்னா நகரில் தார்ச்சாலை அமைக்க பூஜை நடத்தப்பட்டு, தொடர்ந்து முதற்கட்ட பணிகள் நடைபெற்றது. தற்போது ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில்தான் இந்த தெருச் சாலை உள்ளது.இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும், நடந்து செல்ல முடியாமலும் பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்னா நகர்ச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை
வைத்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நிற்கும் இந்த சாலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Jalis ,Karur Municipality ,Abna City ,
× RELATED தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகர்...