×

பூந்தமல்லி ஜமாபந்தி நிறைவு 207 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


திருவள்ளூர், ஜூன் 19: பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஜமாபந்தி அலவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் க.புனிதவதி வரவேற்றார். தனி வட்டாட்சியர் பரமசிவம், துணை வட்டாட்சியர்கள் ஆர். கோவிந்தராஜ், ராஜேஷ் குமார், விஜயகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 24 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்காண ஆணையிணையும், 45 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவிணையும், 116  பேர் இருக்கு  பட்டாவையும், 22 பேருக்கு இதர சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த ஜமாபந்தியில் மொத்தம் 1278 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 207 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும்  1071 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் திமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் பூவை எம்.ரவிக்குமார், எம். ஜெயக்குமார், டி/தேசிங்கு, அதிமுக ஒன்றிய செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி. திருநாவுக்கரசு, நிர்வாகிகள் க.வைத்யநாதன், ஜாவித் அகமது,  கே.எஸ்.ரவிச்சந்திரன், பத்மநாபன், கே.ஜி.டி.கௌதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Poonamallee Jamapanti ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...