×

177 சவரன் மீட்பு


தாம்பரம்: தாம்பரம், சேலையூர், பீர்க்கன்காரணை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, விழுப்புரம் ரோடு, பிள்ளையார் கோயில்  தெருவை சேர்ந்த பழைய பீரோ புல்லிங் கொள்ளையன் நாகமணி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 177 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல் நிலையயங்களில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...