திருச்செந்தூர், ஜூன் 19: திருச்செந்தூர்- குலசை சாலையில் உள்ள குறவன்மடம் இசக்கியம்மன் கோயிலில் ஆனி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கொடை விழா நடந்தது. இதையொட்டி கடந்த 16ம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, நேற்று முன்தினம் இரவு லேபன அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.