×

விளாத்திகுளத்தில் குடிநீர் பிரச்னை கனிமொழி எம்பி தலைமையில் ஜூன் 23ல் வடக்கு மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 19: விளாத்திக்குளம்  பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை கண்டித்தும், நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும்  மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் வரும் 23ம் தேதி  வடக்கு மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: விளாத்திகுளம் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையில் மிகவும் மோசமான  நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீரில்லாத நிலையில் வைப்பாற்றில் பொதுமக்கள் தோண்டிய ஊற்றையும்  அதிகாரிகள்  மனசாட்சியின்றி மூடியுள்ளனர். இதை கண்டித்தும்,  விளாத்திகுளம் பகுதி பொதுமக்களின்  குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தூத்துக்குடி வடக்கு  மாவட்ட திமுக சார்பில் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு விளாத்திகுளம்  எம்ஜிஆர் சிலை அருகே மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : District ,Northern District Tribunal ,Vitthikkulam Water Drinking ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...