×

பார் ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கோவை, ஜூன்.19: கோவை தொண்டாமுத்தூர் அருகே கலிங்கநாயக்கன் பாளையத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு மதுரை மேலூரை சேர்ந்தபூபதிபாண்டியன்(24) என்பவர் ஊழியராகவேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த 3 பேர் பாருக்கு மது குடிக்கவந்தனர்.பூபதி பாண்டியனிடம் மது கொடுக்குமாறுகேட்டனர். நேரம் முடிந்து விட்டதால் மதுகொடுக்க முடியாது என பூபதி பாண்டியன்மறுத்தார். மேலும் மது அருந்த வந்த 3 பேரையும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால்அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் பூபதி பாண்டியனை தாக்கினர். மேலும் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்தபூபதி பாண்டியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து பூபதி பாண்டியன் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்உலியம்பாளையம் கனகராஜ்,பூபதி, சுண்டப்பாளையம் ரமேஷ் ஆகியோர்மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : servant ,
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...