×

ரேஷன் கடையை உடைத்து பொருட்கள் துணிகர திருட்டு

கடலூர், ஜூன் 19: கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே ரேஷன் கடை உள்ளது.வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு விற்பனையாளர் கணேசன் ரேஷன் கடையை மூடி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை ரேஷன் கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர் கணேசனுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அவர் ரேஷன் கடைக்கு வந்து பார்த்தபோது, கடைக்குள் இருந்த 30 கிலோ சர்க்கரை மற்றும் டீத்தூள் திருடு போயிருந்தது. விற்பனையாளர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் இருந்து வரும் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே உள்ள ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா