×

சாலையில் இறந்து கிடந்த மான்

திட்டக்குடி, ஜூன் 19:  ராமநத்தம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக குடிநீரை தேடி கிராம பகுதிகளுக்கு மான்கள் வருவது வழக்கம். இந்நிலையில் ராமநத்தம்- திட்டக்குடி நெடுஞ்சாலையில் ஒரு வயது புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. கடுமையான வெயில் காரணமாக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த மானை நாய்கள் கடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது.தகவல் அறிந்து வந்த சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய பரிசோதனைக்கு பின் மானை அந்த பகுதியில் உள்ள காப்புக்காட்டில் புதைத்தனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...