×

விஷம் குடித்து பெண் தற்கொலை

விருத்தாசலம், ஜூன் 19: விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்த டேவிட் மனைவி பூங்கொடி (48). இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பூங்கொடி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்யும் விதமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டேவிட் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை