×

வத்திராயிருப்பில் மின்விளக்குகள் சீரமைப்பு

வத்திராயிருப்பு, ஜூன் 18: தினகரன் செய்தி எதிரொலியாக, வத்திராயிருப்பில் முத்தாலம்மன் திடல் உள்ளிட்ட பல பகுதிகளில் எரியாமல் இருந்த மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டன. வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் 500க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. இதில் பல தெருவிளக்குகள் எரியாததால், பல இடங்களில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தது. குறிப்பாக முத்தாலம்மன் திடல் பகுதியில் மின்விளக்குகள் சரியாக எரியாமல் இருந்தது. இப்பகுதியில் இரவு 10 மணி வரை கடைகள் மூடியவுடன் முத்தாலம்மன் திடல் பகுதி இருளில் மூழ்கி வந்தது.

இதே மறவர் வடக்குத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு இரண்டு இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. அல்லா கோயில் அருகிலும், வெள்ளாளர் நடுத்தெருவில் இரண்டு இடங்களிலும் மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக வத்திராயிருப்பு பேரூராட்சியில் பழுதான மின்விளக்குகளை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு