×

குடிநீர் குழாய்கள் திருட்டு

மூணாறு, ஜூன் 18: மூணாறு அருகே பழைய மூணாறு பகுதியில் உள்ள பிஆர்சி பள்ளிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் திருடு போனதாக பள்ளி முதல்வர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மூணாறு அருகே பழைய மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகள் படிக்கும் பிஆர்சி பள்ளி செயல்படுகிறது. கடந்த ஆண்டு மூணாறில் பெய்த கனமழை காரணமாக இந்தப் பள்ளி முற்றிலும் சேதமடைந்தது. இதன் மூலம் குடிநீருக்காக குழந்தைகள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் மூணாறு கிராம நிர்வாகம் சார்பில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் இரவில் பள்ளியின் உள்ளே சென்று குழாய்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து மூணாறு காவல்துறை அதிகாரியிடம் பள்ளி முதல்வர் புகார் அளித்துள்ளார். மேலும் பள்ளிக்கும், அதில் பயிலும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது